டெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை --> அகமதாபாத் நகருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது அதிவேக புல்லட் ரயில் திட்டம் டெல்லி --> வாரணாசிக்கும் இடையே செயல்படவுள்ளது, இந்த ரயில் திட்டம் அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, சுல்தான்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த திட்டம் செயல்பாட்டு வரும் போது டெல்லி - வாரணாசி இடையேயான 782 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ₹43 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
COMMENTS