மணல் தட்டுப்பாட்டால் 'எம் சேண்ட்' விலையும் உயர்ந்தது😱
காவேரி மற்றும் பாலாறு போன்ற 🌊ஆறுகளில் உள்ள மணல் படுக்கைகளில் 54 இடங்களில், மணல் குவாரிகள் உள்ளன👍. இந்த குவாரிகளில், மே, 5 முதல் இடைத்தரகர் இல்லாமல், 🏛அரசே மணல் குவாரிகளை எடுத்து நடத்துவதாக முடிவு செய்துள்ளது😯. இந்நிலையில், தினமும், 2,000 லோடு ஏற்றப்பட்ட குவாரிகளில், 25 முதல், 50 லோடுகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன😳. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு மணல் கிடைக்காமல், 🏗கட்டுமான பணிகள் பாதியில் நின்றுள்ளது😱. மேலும், 🚚லாரி உரிமையாளர்களுக்கும் லோடு கிடைக்காததால் தவித்து வருகின்றனர்😟. மணல் கிடைக்காத காரணத்தினால் 'எம் சேண்ட்' எனப்படும் செயற்கை மணலை 90% பேர் தற்போது உபயோகித்து வருகின்றனர்😯. இதனால், ஒரு லோடு ரூ.10,000 இருந்த 'எம் சேண்ட்' விலை தற்போது ஒரு லோடுக்கு 💸ரூ.21,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😱.
COMMENTS