திருப்பதி தேவஸ்தானத்தில் 1400 கேமராக்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 1400 📹கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது👏. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது👍. அதில் ஒருகட்டமாக அலிபிரி சோதனை சாவடி முதல் திருமலை முழுவதும் 📹சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது😯. இந்நிலையில் குற்றவாளிகளை அலிபிரி சோதனை சாவடியிலேயே அடையாளம் காணப்பட்டு அவர்களை பிடிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👌.
தற்போது கட்டுப்பாட்டு அறையில் 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்😯. ஒரு சிப்டுக்கு 5 பேர் என நியமிக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது👍. மேலும் இதில் 10 பேர் நியமிக்கப்பட்டு எந்த விதத்திலும் குற்றவாளிகள் நடமாட்டம் இல்லாமல் இருக்க கண்காணிக்கப்பட உள்ளது👏. தொடர்ந்து பக்தர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍.
COMMENTS