பாலியல் குற்றவாளி ராம் ரஹீம்-சிறையில் சொகுசு வாழ்க்கை
பாலியல் வழக்கில் குற்றவாளி என ⚖தீர்ப்பளிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது😳. மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்படுவதுடன், அவருக்கு உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😱. இதனிடையே, கோர்ட் ⚖உத்தரவுப்படி அவருக்கு சொந்தமான 2 ஆசிரமங்களுக்கு அரியானா மாநில அரசு சீல் வைத்துள்ளது😯. 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங், 60, பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், 😡ஆத்திரமடைந்த அவருடைய ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 31 பேர் உயிரிழந்தனர்; பலர் 🤕காயமடைந்தனர். 👮போலீஸ் வாகனங்கள் உட்பட பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன😱.
இந்நிலையில் குற்றவாளி ராம் ரஹீமை, 👮போலீசார் 🚁ஹெலிகாப்டர் மூலம் ரோதக் அழைத்து சென்றுள்ளனர்😯. அவருடன் ஏராளமான பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது நீதிமன்ற 📹வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோதக்கில் சொகுசு 🏨விடுதி ஒன்றிற்கு ராம் ரஹீம் அழைத்து செல்லப்பட்டு, ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது😱. பின்னர் மாலை சிறையில் அடைத்தனர். ஆனால், இவருக்கு ⛓சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டது என்பதனை 👮அதிகாரிகள் 🚫மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS