இதழியலில் ஒரு புரட்சி
பார்வையற்றவர்களின் படைப்புகளை முதலாகக் கொண்டு பார்வையற்றவர்களால்
நடத்தப்படும் முதல் மின்னிதழாகத் தொடங்கப்பட்டிருக்கிறது ‘விரல்மொழியர்’.
ஜனவரி 27 அன்று புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த எளிய
விழாவில் இதழைத் தொடங்கிவைத்தார் இணையத் தென்றல் மின்மடல் குழுவின்
நெறியாளர் மு. பார்த்திபன் அவர்கள்.
பார்வையற்றவர்களின் வாழ்வியல் அனுபவங்கள், சிக்கல்கள்,
தொழில்நுட்பம் முதலியவற்றோடு அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம்
முதலிய பொருள்களிலும் நம்மவர்கள் எழுதலாம். பார்வையற்றவர்கள் குறித்த
பார்வையுள்ளோரின் படைப்புகளும் இதழில் இடம்பெறும்.
ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல்,
ரா. சரவணன், ஜோ. யோகேஷ் ஆகிய 6 பார்வையற்ற இளைஞர்களின் புதிய முயற்சி
இது.
நம்மை நாம் அறிந்துகொள்ள, நம்மை நாம் உலகிற்கு வெளிப்படுத்த ஒரு சிறந்த
களம். படிப்பாளிகளையும், படைப்பாளிகளையும் மகிழ்வோடு வரவேற்கிறோம்.
இதழைப் பாருங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்.
இதழைப் படிக்க: www.viralmozhiyar.weebly.com
பார்வையற்றவர்களின் படைப்புகளை முதலாகக் கொண்டு பார்வையற்றவர்களால்
நடத்தப்படும் முதல் மின்னிதழாகத் தொடங்கப்பட்டிருக்கிறது ‘விரல்மொழியர்’.
ஜனவரி 27 அன்று புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த எளிய
விழாவில் இதழைத் தொடங்கிவைத்தார் இணையத் தென்றல் மின்மடல் குழுவின்
நெறியாளர் மு. பார்த்திபன் அவர்கள்.
பார்வையற்றவர்களின் வாழ்வியல் அனுபவங்கள், சிக்கல்கள்,
தொழில்நுட்பம் முதலியவற்றோடு அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம்
முதலிய பொருள்களிலும் நம்மவர்கள் எழுதலாம். பார்வையற்றவர்கள் குறித்த
பார்வையுள்ளோரின் படைப்புகளும் இதழில் இடம்பெறும்.
ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல்,
ரா. சரவணன், ஜோ. யோகேஷ் ஆகிய 6 பார்வையற்ற இளைஞர்களின் புதிய முயற்சி
இது.
நம்மை நாம் அறிந்துகொள்ள, நம்மை நாம் உலகிற்கு வெளிப்படுத்த ஒரு சிறந்த
களம். படிப்பாளிகளையும், படைப்பாளிகளையும் மகிழ்வோடு வரவேற்கிறோம்.
இதழைப் பாருங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்.
இதழைப் படிக்க: www.viralmozhiyar.weebly.com
COMMENTS