மொபைல் ஆப் மூலம் ரஜினி மன்றத்தில் பதிவு
கிராமத்தில் உள்ள ரஜினி ரசிகர்களை அவரது ரஜினி மக்கள் மன்றத்தில் இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு மினி வேனில் ஒரு புகைப்படக் கலைஞர், மொபைல் பதிவாளருடன் சென்று கிராங்களில் உள்ள ரஜினி ரசிகர்களை சந்தித்து அவர்களின் விபரங்கள், ஆதார் எண் பெற்று ரஜினி மக்கள் மன்றத்தில் இணைத்து வருகின்றனர். இவர்கள் 404 பஞ்சாயத்துகளில் உள்ள ரசிகர்களை இதுவரை இணைத்துள்ளனர் என்றும், முசிறி, துரையூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முடித்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
COMMENTS