நடு இரவில் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள்-ஆர்ப்பாட்டத்தில் அதிமுக
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு திருவண்ணாமலை போலீசார் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிமுகவினர் சிலைகளை அகற்றக் கூடாது🚫 என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது😱. இதற்கு முன்னதாக ஏற்கனவே இதுபோல் ஆரணியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு திருவண்ணாமலை போலீசார் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிமுகவினர் சிலைகளை அகற்றக் கூடாது🚫 என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது😱. இதற்கு முன்னதாக ஏற்கனவே இதுபோல் ஆரணியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS