ஜாக்டோ ஜியோ அமைப்பு-போராட்டத்திற்க்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்
புதிய 💸ஓய்வூதிய திட்டத்தை ரத்து🚫 செய்யக்கோரி🙏 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை 🏛உயர் நீதிமன்றம் மறுப்பு🚫 தெரிவித்துள்ளது🔈. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை நகருக்குள் போராட்டம் நடத்த தடை🚫 விதிக்கக் கோரி🙏 நயினா முகமது என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது😯. அப்போது, நீதிபதிகள் கூறுகையில்🎙, வேலை நிறுத்ததில் ஈடுபடாமல் பொதுமக்களுக்கு இடையூறு🙄 ஏற்படாத வகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவார்கள் என 🏛நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்தனர்👍. மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்😯 என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்🔈. மேலும், வேலை பார்க்கும் அலுவலக வளாகம், தனியாருக்கு சொந்தமான 🏢வளாகங்களில் போராட்டம் நடத்தினால் 🏛நீதிமன்றம் தலையிடாது🚫 என்று கூறிய நீதிபதிகள் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்🚫 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS