ஸ்டாலின் பெயரில் போலி 💻ட்விட்டர் பக்கம்😳-👮போலீசில் புகார்
மு.க.ஸ்டாலின் பெயரில் போலி 💻டுவிட்டர் பக்கம் தொடங்கியது தொடர்பாக சென்னை 👮போலீஸ் கமிஷனர் 🏢அலுவலகத்தில் அவருடைய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி 💻ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு போலி பதிவுகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை 👮போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவருடைய புகார் 📜மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் ✍கையெழுத்திட்ட 📜மனுவினை நேற்று மாலை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்ட 🤔ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சென்னை 👮கமிஷ்னர் 🏢அலுவலகத்தில் கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில்📜, "திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலை செய்து வருகின்றனர்😳. தீய எண்ணத்துடனும் இது போன்ற விஷமச் செயலை செய்து வருகிறார்கள்😡. இந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும்😳. இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்🙏" என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது👍.
COMMENTS