சென்னையில் இரண்டாக பிரிந்த மின்சார ரயில்
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு மின்சார ரயில் ஒன்று சென்றது. ரயில், ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி இடையே வந்த போது, திடீரென மின்சார ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் திடீரென பிரிந்து விட்டன.
இதனால் ரயில் இரண்டாக பிரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். இது குறித்து ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த ஊழியர்கள், ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த ரயிலில் இருந்த பயணிகள் வேறு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் காரணமாக அந்த வழியில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளீங் உடைந்ததே பெட்டிகள் பிரிந்ததற்கு காரணம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
COMMENTS