தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
விஷன் 2023 என்ற திட்டத்தின் கீழ் 🏛தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி 🚰குடிநீர் வழங்குவதற்கான திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் 💦குடிநீர் வழங்கல் துறை 👮அதிகாரிகள் கலந்துகொண்டனர்👍. தமிழகத்தில் உள்ள 🏘குடியிருப்புகளுக்கு தங்குதடையின்றி🚫 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. இதனையடுத்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி🎙, "⌚24 மணி நேரமும் 🚰குடிநீர் வழங்கும் 14 திட்டங்கள் 💸21,050 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 🏛தமிழகம் முழுவதும் சிறப்பான 🚰குடிநீர் விநியோகத் திறனை பெறும் வகையில் அதிகாரிகளுக்கு பிலிப்பைன்சில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 👮170 அதிகாரிகளை 👥7 குழுக்களாக பிரித்து 5 நாட்கள் பிலிப்பைன்சின் மணிலாவிலும் 📆5 நாட்கள் சென்னையிலும் என இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்🔈.
COMMENTS