50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு
தஞ்சை பெரிய 🙏கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் திருடப்பட்ட 💸150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு சிலைகள் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டது👏. தஞ்சை கோயிலில் அதனை கட்டிய ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகா மகாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது😱 அண்மையில் தெரிய வந்தது. 🙏கோவிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், ராவு பகதூர் ஸ்ரீனிவாச கோபால் ஆச்சாரி மூலமாக சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்றதை 🗿சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 👮ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்👍.
அதன் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்🚫 பிரிவு நேற்று விசாரணை நடத்தியது👍. அப்போது இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது🙄. இதில் 2.5 அடி உயரம் உள்ள ராஜராஜ சிலையின் மதிப்பு 💸ரூ.100 கோடியாகும். இரண்டு அடிக்கும் குறைவாக உள்ள உலோகா மகாதேவியின் 🗿சிலை மதிப்பு 💸ரூ. 50 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS