ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வசதி அறிமுகம்
🚆ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருப்பவர்களுக்காக ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது👍. இது குறித்து 🚆ரயில்வே துறையின் மூத்த 👮அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙, "பயணிகள் டிக்கெட் 💻முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை🙂. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது👌. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல் இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா⁉ அல்லது ஆர்ஏசியில் வருமா😟 என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும்😯. இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே 🚆ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்👍" எனத் தெரிவித்துள்ளார்🔈.
COMMENTS