தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்-கர்நாடக முதல்வர்
தமிழகத்துக்கு கூடுதல் 💦தண்ணீர் திறந்து விடப்படும்👍 என்று கர்நாடக 💺முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்🔈. ஆன்மீக தரிசனத்திற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரை வந்தார். பின்னர், மதுரை விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது🎙, "இறைவனின் அருளால் கர்நாடகாவில் நல்ல ☔மழை பெய்து வருகிறது. இதனால் இம்முறை தமிழகத்துக்கு 💦காவிரி நீர் வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது. நல்ல ☔மழை பெய்து வருவதால், தொடர்ந்து தண்ணீர் விடப்படும். ஏற்கனவே 🏛தமிழகத்தக்கு நேற்று இரவு 20,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது😯. மழையால் அணை நிரம்ப நிரம்ப இன்னும் கூடுதலாக 🌊தண்ணீர் திறக்கப்படும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
COMMENTS